TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர் பணி நீக்கத்துக்கு தடை

 ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறாத ஆசிரியர்களை பணியிலிருந்து நீக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் திருவண்ணாமலை மாவட்டம் பெருங்களத்தூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றும் இந்திரா, கவிதா, இந்திராகாந்தி, ஜோதி ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை எனக் கூறி, எங்களைப் பணிநீக்கம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. நாங்கள் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தபோது ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயமாகத் தேர்ச்சிப் பெற வேண்டும் என்ற சட்டம் இல்லை.
எனவே அரசின் இந்த முடிவுக்கு தடை விதிக்க வேண்டும்.

மேலும் 2019-ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வின் முடிவுகள் வெளியாகும் வரை எங்களை பணிநீக்கம் செய்யக் கூடாது என்று கோரியிருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சுமார் 60 ஆயிரம் பேர் காத்திருக்கின்றனர். ஆனால் மனுதாரர்கள் வாய்ப்பு கிடைத்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெறாமல் உள்ளனர். எனவே, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் ஆசிரியர்களாக பணியாற்றி வருபவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் பெற்று, சட்டப்படி தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து, திருவண்ணாமலையை சேர்ந்த 4 ஆசிரியைகள் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு இன்று வியாழக்கிழமை (மே 16) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெறாத ஆசிரியர்கள் வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள தகுதித் தேர்வில் பங்கேற்க வேண்டும் என்றும், அவர்கள் மீது பணி நீக்க நடவடிக்கை எடுக்கக் கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை ஜூன் 2-வது வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.
Share on Google Plus

About Tnta

Am facilitator
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment