TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

அரசு ஐடிஐ மாணவர் சேர்க்கை: மே 31- க்குள் விண்ணப்பிக்கலாம்

திருவான்மியூரில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி பிரிவில் சேர மே 31 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அ.சண்முக சுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
திருவான்மியூரில் அரசுத் தொழிற்பயிற்சிப் பிரிவானது செயல்பட்டு வருகிறது. 
இங்கு, கம்மியர் மின்னணுவியல் (Electronic Mechanic),மின்சாரப் பணியாளர் (Electrician), மருத்துவ மின்னணுவியல் நுட்பவியலாளர் (Technician Medical Electronics - SCVT) எனப்படும் 3 ஆண்டு கால படிப்புகளும், கணிணி இயக்குபவர் மற்றும் திட்டமிடல் உதவியாளர் (Computer Operator And Programming Assistant) எனப்படும் ஓராண்டு கால படிப்பும் இங்கு வழங்கப்படுகின்றன.


இந்த படிப்புகளில் சேர பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பத்தினை www.skilltraininig.tn.gov.in எனும் இணைய தளத்தில் பூர்த்தி செய்து, மே 31 -ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Share on Google Plus

About Tnta

Am facilitator
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment