TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

பொதுத்தேர்வு மொழிப்பாடங்களில் மாற்றம் - எதிர்காலச்சமுதாயத்தையே பாதிக்கும் பரிந்துரையினை கைவிடுக தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை :






பொதுத்தேர்வு மொழிப்பாடங்களில் மாற்றம் -  எதிர்காலச்சமுதாயத்தையே பாதிக்கும் பரிந்துரையினை கைவிடுக

தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்
வேண்டுகோள்
மாநிலத்தலைவர்
பி.கே.இளமாறன் அறிக்கை :

*11 மற்றும் 12ம் வகுப்பு மொழிப்பாடத்தில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்தால் போதும் - அரசுக்கு பள்ளிக்கல்வித்துறை பரிந்துரை செய்துள்ளது வேடிக்கையாக உள்ளது

*மொத்தப்பாடங்கள் எண்ணிக்கையை 6ல் இருந்து 5 ஆக குறைப்பது எளிமையாக்குவதாக நினைத்து மாணவர்களிடையே மொழி ஆர்வத்தை குறைக்கச்செய்யும் நடவடிக்கையாகும்
   11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஏதாவது ஒரு மொழியினை தேர்ந்.தெடுக்கச் சொல்லும் போது ஆங்கில வழிக்கல்வியில் படிக்கும் மாணவர்கள் தமிழ்ப்பாடத்தை ஒதுக்கித்தள்ளுவார்கள். ஏற்கனவே தமிழ்ப்பாடம்  கட்டாயம் என்று சட்டம் இயற்றியது என்னவாகும்?  தமிழ்நாட்டில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும். மேலும் தமிழ்வழியில் பயிலும் மாணவர்கள் ஆங்கிலப்பாடத்தைப் புறக்கணிப்பார்கள் இதனால் தொடர்புமொழியும் துணடிப்பதாகும். இருமொழிக்கொள்கை காற்றில் பறக்கும்.

*10ம் வகுப்பிற்கு இனி தமிழ் மற்றும் ஆங்கிலத்திற்கு 2 தாள் கிடையாது, ஒரே தாள் தான் பரிந்துரைப்பதும் மொழியின் தாக்கத்தை வேரிலே வெந்நீர் ஊற்றி அழிக்கும் நடவடிக்கையாகும். இரண்டாம் தாள் என்பது மொழியினை பிழையின்றி எழுதவும் படிப்பது மட்டுமல்ல மொழி இலக்கணத்தையும் ஆளுமைத்தன்மையையும் வெளிப்படுத்தும் .*மாண்புமிகு. முதலமைச்சர் அவர்கள் பள்ளிக்கல்வித்துறையின் பரிந்துரை எதிர்காலச்சமுதாயத்தை சவக்குழிக்கு அனுப்பும் முயற்சியாகும் என்பதால்  முழுமையாக. நிராகரித்து மொழியின் வளர்ச்சியும், மாணவர்களின் எதிர்காலத்தையும் காப்பாற்றிட தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன்.
 பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் 98845 86716
Share on Google Plus

About Tnta

Am facilitator
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment