TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியீடு


சென்னை: நாடு முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்கீழ் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ளது. நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் பிப்ரவரி 2ம் தேதி முதல் மார்ச் 29ம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது. அதில் 27 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.. www.cbseresults.nic.in மற்றும் cbse.nic.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவை அறிந்துகொள்ளலாம். சிபிஎஸ்இ இணையதளங்களின் முகப்பு பக்கத்தில் ''பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு 2019'' என்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டும். 

அதைத்தொடர்ந்து மாணவர்களின் பதிவு எண், பள்ளி ரோல் நம்பர், ஹால்டிக்கட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை பதிவேற்றம் செய்து சப்மிட் பட்டனை அழுத்த வேண்டும்.

அதைத்தொடர்ந்து மாணவரின் தேர்வு முடிவு திரையில் தோன்றும். அதை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். சிபிஎஸ்இ பிளஸ்2, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 3ம் வாரத்தில் வெளியிட சிபிஎஸ்இ திட்டமிட்டிருந்தது. ஆனால் சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வுகள் முன்கூட்டியே மே 2ம் தேதி வெளியிடப்பட்டது. பத்தாம் வகுப்பு தேர்வு இன்று வெளியாக உள்ளது. கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வை எழுதியவர்களில் 86.70 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
ஆதாரம் தினகரன்.
Share on Google Plus

About Tnta

Am facilitator
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment