மத்திய அரசின் புதியக் கல்வி கொள்கைக்கான வரைவு நேற்று வெளியிடப்பட்டது. இதில் இந்தி பேசாத மாநிலங்களில், இந்தியைத் திணித்திட பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள தேசிய கல்வி கொள்கையானது 1986 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்டு, 1992 ஆம் ஆண்டு திருத்தப்பட்டது. 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது புதிய கல்விக் கொள்கை கொண்டுவரப்படும் என்று பாஜக வாக்குறுதி கொடுத்திருந்தது, அதன்படி 2016 ஆம் ஆண்டு டி.எஸ்.சுப்பிரமணியம் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.அக்குழு பரிந்துரைத்ததிலும் பல குளறுபடிகள். பிறகு கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 9 பேர் கொண்ட நிபுணர்கள் குழு, அமைக்கப் பட்டது.
அந்த குழு, தேசிய கல்வி கொள்கைக்கான வரைவை, புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மத்திய மனித வளம் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போகிரியால் அவர்களிடம் நேற்று ஒப்படைத்தது.
புதிய வரைவில் மும்மொழி கொள்கை அடிப்படையில் மாநிலங்களை, இந்தி மொழி பேசும் மாநிலங்கள், பேசாத மாநிலங்கள் என இருவகையாகப் பிரித்துள்ளனர். இந்தி பேசாத மாநிலங்களில், அந்த மாநில தாய்மொழி, ஆங்கிலம் ஆகியவற்றோடு இந்தி மொழியை கற்பிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டினைப் பொறுத்தவரை இருமொழிக்கொள்கை கடைப்பிடித்துவருகிறது.இருமொழிக்கொள்கைக்கு பாதிப்பு வராமலும் தேசியகல்விக்கொள்கை மாற்றியமைக்கப்பட வேண்டும்.மேலும்
புதிய கல்விக் கொள்கையில் பள்ளிக்கல்வித்துறை பொறுத்தமட்டில்
Level1:
முன்பருவக்கல்வி முதல் 2 ஆம் வகுப்பு வரை
Level 2 :
3 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு
Level 3:
6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை
Level 4:
9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை
9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பருவத்தேர்வு( செமஸ்டர)் முறை ஆண்டுக்கு 2 தேர்வுகள் அறிமுகம் வரவேற்புக்குரியது.பருவத்தேர்வுபப்பற்றியும் விளக்கமாக குறிப்பிடவேண்டும்
இந்த புதியக்கல்வி கொள்கைக்கான வரைவு அறிக்கை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.கருத்துக்களை தெளிவாகக் குறிப்பிட அந்தந்த தாய்மொழியில் வரைவு அறிக்கை இருந்தால் மட்டுமே முழுமைப்பெறும் என்பதால், இந்திய மொழிகள் அனைத்திலும் மொழிப்பெயர்த்து வெளியிடவேண்டும். அப்போதுதான் புதியக்கல்விக்கொள்கைக்கான இலக்கினை அடைய முடியும். வரைவு அறிக்கைக் குறித்து பொதுமக்கள் கருத்தினை பதிவு செய்திட ஜூன் 30 ஆம் தேதி என்பதை மறுபரிசீலனை செய்து மொழிப்பெயர்ப்பு வரைவு அறிக்கை வெளியிட்டு மூன்று மாதக்கால அவகாசம் வழங்க வேண்டுமென தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் 98845 86716
தமிழில் இருந்தால் அனைத்து மக்களும் புரிந்து கொள்ள முடியும்...
ReplyDelete