TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

+1 +2 பொதுத்தேர்வில் மாற்றம் - தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்பு-வேண்டுகோள்: மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை.


  தமிழ்நாடு அரசு கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களில் மாணவர்களின் மனநிலையினை அறிந்து அனைத்து தரப்பினரும் வரவேற்கக் கூடிய மாற்றத்தை கொண்டுவந்துள்ள அரசாணை 166 ஐ அளித்த முதலமைச்சர் அவர்களுக்கும் கல்வி அமைச்சர் அவர்களுக்கும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.மேலும் மாணவர்களின் மன உளைச்சலிருந்து விடுபடவும் தனக்குரிய பாடங்களை தேர்வு செய்வதிலும் தன்னம்பிக்கை வளர்க்க உதவும்.உயர் கல்விக்கு எவ்வித அச்சமுமின்றி படிப்பதற்கு வழிவகுக்கும். ஏனெனில் சில மாணவர்களுக்கு அறிவியல் பாடம் படிப்பவர்கள் கணிதம் கடினமாக இருக்கும் ஒரு சில மாணவர்களுக்கு கணக்கு நன்கு வரும் என்பதால்  இந்த மாற்றம் மாணவர்கள்,பெற்றோர்கள் ஆசிரியர்கள் முழுமனதோடு வரவேற்பதோடு மகிழ்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது.மேலும் எதிர்வரும் கல்வி ஆண்டில் 2020-2021 ல்  அமல் படுத்தப்படவுள்ள பொதுத்தேர்வில் 600 மதிப்பெண் 500 மதிப்பெண் திட்டத்தினை தற்போது +1 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் 500 மதிப்பெண் பாடங்களை தேர்வுசெய்து படிப்பதற்கு ஏதுவாக விரும்பும் மாணவர்களுக்கு ஒரு முதன்மை பாடத்திலிருந்து விடுவிக்கும் வாய்ப்பினை வழங்கிட வேண்டும் என பெரும்பாலான மாணவர்கள் பெற்றோர்களின் எதிர்பார்ப்பினை நிறைவேற்றிட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகின்றேன்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்.
98845 86716
Share on Google Plus

About Tnta

Am facilitator
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment