TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

பள்ளி கல்வித்துறையின் புதிய திட்டம்.!! இனி மாணவர்களுக்கு வகுப்பறையை தேவையில்லை.!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிச்செட்டிப்பாளையத்தில் இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை, சந்தித்தார் அப்போது, " 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தமிழகத்தில் அரசு பள்ளிகளில் இலவச காலணிகளுக்கு பதில் இனிமேல் ஷூ வழங்கப்படும்." என்று நடப்பு கல்வியாண்டில் வழங்குவதற்கு முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த கல்வியாண்டில் இம்மாத இறுதிக்குள் 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் 10 லட்சத்து 40 ஆயிரம் மாணவா்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும் என்றும், மேலும், 3 மாத காலத்தில் 2017 - 2018-ம் ஆண்டு 12-ம் வகுப்பு படித்த மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட இருக்கிறது என்றும்,
அடுத்த மாதம் முதல் மாணவர்களுக்கு யூ டியூப் பாடத்திட்டம் உருவாக்கப்பட இருக்கிறது என்றும், வகுப்பறையில் நடத்தப்படும் பாடங்கள் யூ டியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டு பின்பு மாணவர்கள் சந்தேகம் ஏற்படும் போது பார்த்துக்கொள்ளமாறு இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
Share on Google Plus

About Tnta

Am facilitator
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment