TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

POCSO Act Amendment Bill 2019 : தண்டனைகளில் மாற்றம்


இந்த சட்டத்தின் நான்காவது பிரிவில், 16 முதல் 17 வயது குழந்தைகளின் மீது நடத்தப்படும் கட்டாய வல்லுறவுக்கான தண்டனை 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

16 வயதுக்கும் குறைவான குழந்தைகள் மீது நடத்தப்படும் இந்த தாக்குதலுக்கான தண்டனை 20 வருடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

குழந்தைகளின் ஆபாச படங்களை கம்ர்சியல் தேவைகளுக்காக பயன்படுத்தப்படுவது / பார்ப்பது / சேமித்துவைப்பது ஆகியவையும் குற்றமே. அவை கண்டறியப்பட்டால் அதற்கான தண்டனை மூன்று முதல் 5 ஆண்டுகளாகும். அபராதமும் விதிக்கப்படும்.

இந்த சட்ட மசோதா நிறைவேற்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசு தரப்பு அறிவிக்கின்றது. மேலும் தேசிய குற்றப்பதிவு ஆணையம் 2016ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையின் படி, 3%க்கும் குறைவான, குழந்தைகள் மீது நடைபெறும் பாலியல் குற்றங்கள் நீதிமன்றங்களுக்கு வருகின்றன. பாதிக்கப்படும் அனைத்து தரப்பினருக்கும் உண்மையான நீதி கிடைக்க இந்த மாற்றங்கள் உருவாக்கப்பட்டதாக அறிவித்துள்ளது இந்திய அரசு.
Share on Google Plus

About Tnta

Am facilitator
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment