- 3 லட்சம் கோடி டாலர் எனும் அளவை நடப்பு நிதி ஆண்டில் இந்திய பொருளாதாரம் கடக்கும்.
- இந்தியாவின் சர்வதேச கடன் அளவு நாட்டின் ஜிடிபியில் 5 சதவிகிதத்துக்குள் உள்ளது.
- உள்நாட்டுக் கடன் வளர்ச்சி 13.8 சதவீதம் அதிகரிப்பு.
- சிறு மற்றும் குறு தொழில்களில் வேலைவாய்ப்பை அதிகரிப்பதுதான் தற்போது எடுக்கப்பட்டுள்ள முதல் இலக்கு.
- நாடு முழுவதும் சம அளவில் மின்சார வினியோகம் அளிக்கும் விதத்தில் 'ஒரே நாடு ஒரே மின் வினியோகம்' திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
- 2022ம் ஆண்டுக்குள் இந்தியாவில் மின்சார இணைப்பு இல்லாத வீடே இல்லை என்கிற நிலை ஏற்படும்.
- பாரத்மாலா மற்றும் சாகர்மாலா ஆகிய திட்டங்கள் மூலம் போக்குவரத்துத் துறை உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படுகிறது.
- கடந்த 5 ஆண்டுகளில் 657 கிமீ தொலைவுக்கு மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
- 2030ம் ஆண்டு வரை ரயில்வே கட்டுமானத்துக்கு ரூ.50 லட்சம் கோடி தேவைப்படுகிறது; தண்டவாளங்கள் அமைத்தல் பயணிகள் ரயில் இயக்கம் மற்றும் சில கட்டுமானப் பணிகள் தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்போடு நடைபெறும்.
- ஆண்டுதோறும் ரூ.20 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்படும்.
- வருமான வரி விலக்குப் பெறுவதற்கான உச்சவரம்பில் (ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை) மாற்றம் இல்லை.
- ஆண்டு வருமானம் ரூ.5 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 7% கூடுதல் வரி
- ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் பணமாக வங்கிக் கணக்கில் இருந்து எடுத்தால் 2% வரி பிடித்தம்.
- பான் அட்டை இல்லையென்றால் ஆதார் எண்ணை சமர்ப்பித்து வருமான வரி தாக்கல் செய்யலாம்.
- தங்கம் இறக்குமதி மீதான வரி 10%ல் இருந்து 12% ஆக உயர்வு.
- பெட்ரோல், டீசல் மீது லிட்டருக்கு ரூ.1 கூடுதல் வரி விதிப்பு
- 15 ஆண்டுகள் வீட்டுக் கடனுக்கு ரூ.7 லட்சம் வரை மிச்சமாகும்.
- குறைந்த விலை வீடுகளுக்கான வட்டியில் ரூ.1.5 லட்சம் கூடுதல் வரி விலக்கு பெறலாம்.
- கடனில் வாங்கப்படும் மின் வாகனத்துக்கான வட்டியில் ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கு பெறலாம்.
- கடந்த 5 ஆண்டுகளில் நேரடி வரி வருவாய் ரூ.6.3 லட்சம் கோடியிலிருந்து ரூ.11.37 லட்சம் கோடியாக (78%) உயர்ந்துள்ளது.
- ரூ.400 கோடி வரை வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்கு 25% வரி விதிக்கப்படும். (99.3% நிறுவனங்கள் 25% வரி வரம்புக்குள் உள்ளன)
- ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான வரி விதிப்பு முறைகள் தளர்த்தப்படும்.
- பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் பங்கு குறைந்தபட்சம் 51% ஆக நீடிக்கும்.
- அரசு பங்கு விற்பனை மூலம் பொதுத் துறை நிறுவனங்களில் ரூ.1.05 லட்சம் கோடி நிதி திரட்டப்படும்.
- ரயில் நிலையங்களை நவீனப்படுத்தும் திட்டம் அடுத்த ஆண்டு தொடக்கம்.
- புறநகர் ரயில் சேவையை அதிகரிக்கத் திட்டம்.
- 2030ம் ஆண்டுக்குள் ரயில்வே துறையில் ரூ.50 லட்சம் கோடி முதலீடு செய்ய நடவடிக்கை.
- உதான் திட்டம் மூலம் சிறிய நகரங்களுக்கும் குறைந்த கட்டண விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.
- சரக்குப் போக்குவரத்தை மேம்படுத்த ஆற்றுவழி போக்குவரத்து மேம்படுத்தப்படும்.
- நாட்டின் கட்டமைப்பை மேம்படுத்த அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.100 லட்சம் கோடி முதலீடு.
- வங்கிகளில் வாராக் கடன் கடந்தாண்டில் ஒரு லட்சம் கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
- பொதுத் துறை வங்கிகளுக்கு மூலதன நிதியாக ரூ.70 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும்.
- முக்கிய சுற்றுலா தலங்களை சர்வதேசத் தரத்திற்கு மேம்படுத்த நடவடிக்கை; அதன்படி, 74 புதிய சுற்றுலா மையங்கள் ஏற்படுத்தப்படும்.
- இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஆதார் கார்டு.
- எல்இடி பல்புகள் மூலமாக ஆண்டுக்கு ரூ.341 கோடி அளவுக்கு மின் கட்டணம் சேமிக்கப்படுகிறது.
- சூரிய சக்தி அடுப்புகளை பயன்படுத்த ஊக்குவிக்கப்படும்.
- கழிவு நீர் மற்றும் சாக்கடைக் கழிவுகளை அகற்ற ரோபோக்கள் பயன்படுத்தப்படும்.
- கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் கல்வித் தரம் உயர்வு
- உலகின் சிறந்த 200 கல்வி நிறுவனங்களின் பட்டியலில் இந்தியாவின் 3 கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன.
- இந்தியா விரைவில் உயர் கல்வி மையமாக மாறும்.
- வெளிநாட்டு மாணவர்களையும் ஈர்க்கும் வகையில் 'இந்தியாவில் படியுங்கள்' திட்டம்.
- 'விளையாடு இந்தியா' திட்டம் விரிவுபடுத்தப்படும்.
- தேசிய விளையாட்டு கல்வி வாரியம் அமைக்கப்படும்.
- சர்வதேச அளவில் போட்டியிட இந்திய மாணவர்கள் தயாராகும் வரை உயர்கல்வித் துறையில் புதிய கொள்கை.
- சர்வதேச அளவில் வேலை வாய்ப்பை பெறும் வகையில் 1 கோடி இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படும்.
- புதிய தொழில் நிறுவனங்களுக்காக சிறப்பு தொலைக்காட்சி சேனல்கள் உருவாக்கப்படும்.
- நாடு முழுவதும் தொழில் தொடங்க உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும்.
- சர்வதேச அளவில் பொருளாதாரம் மந்தநிலையில் இருந்தாலும், இந்தியாவில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது.
- காப்பீட்டுத் துறையில் இடைநிலை அமைப்புகளுக்கு 100% அன்னிய முதலீடு அனுமதிக்கப்படும்.
- சில்லறை மற்றும் வணிகம், விமானத் துறை உள்ளிட்டவற்றில் கூடுதல் அன்னிய முதலீடு அனுமதிக்கப்படும்.
- ஊடகத் துறையில் அன்னிய முதலீடுகளை அனுமதிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும்.
- 2024ம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களில் உள்ள வீடுகளுக்கும் சுகாதாரமான குடிநீர் உறுதி செய்யும் 'ஹர் கர் ஜல் (ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர்)' திட்டம் .
- உணவுத் துறையில் தன்னிறைவு அடைந்த நாடாக இந்தியா மாற்றம்.
- வேளாண் துறை சார்ந்த கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும்.
- விவசாயத் துறையில் தனியார் பங்களிப்பு அதிகம் தேவை.
- எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியிலும் தன்னிறைவு பெறுவோம்.
- கடந்த 5 ஆண்டுகளில் 7 கோடி குடும்பங்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
- ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 2022ம் ஆண்டுக்குள் கேஸ் இணைப்பு.
- நாடு முழுவதும் 1.95 கோடி வீடுகள் கட்டி உரிய பயனாளிகளுக்கு வழங்கப்படும்.
- அனைத்து ஊரக பகுதிகளில் வசிக்கும் 1.9 கோடி குடும்பத்தினருக்கும் 2022ம் ஆண்டுக்குள் சொந்த வீடு.
- அனைவரும் வசதியான வகையில் வீடுகளில் வசிக்க நடவடிக்கை.
- ஆண்டுக்கு ரூ.1.5 கோடிக்குக் குறைவாக வர்த்தகம் செய்யும் சிறு வியாபாரிகளுக்கு ஓய்வூதியத் திட்டம் விரிவுபடுத்தப்படும்.
Home / Uncategories / நடப்பு நிதியாண்டுக்கான (2019-20) மத்திய பட்ஜெட்டின் சில முக்கிய அம்சங்கள் இதோ...
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Comments:
Post a Comment