TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

கற்றல்-கற்பித்தல் பாதிக்கும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தினை கைவிடுக. தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை.


மாநிலத்தலைவர்
பி.கே.இளமாறன் அறிக்கை.
 மழலையர் கல்வி முதல் 12 ஆம் வகுப்பு வரை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி  முறை பல்வேறு நடைமுறை சிக்கலை ஏற்படுத்துவதோடு மாணவர்களின் கல்வி நலனும் பாதிக்கும். தற்போது நடைமுறையிலுள்ள தொடக்கப்பள்ளி,நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளி  அமைப்பு சரியான பாதையில் சென்றுக்கொண்டிருக்கும் போது மறு சீராய்வு என்ற பெயரில் ஆட்குறைப்பு நடவடிக்கையாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கொண்டுவருவது பணிச்சுமை மட்டுமின்றி கற்றலும் கற்பித்தலுக்கும் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக தொடக்க கல்விக்கும் மேல்நிலைக்கல்விக்கும் முற்றிலும் மாறுபட்ட நடவடிக்கைகள். 10 மற்று 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார்செய்யும் பொருட்டு தொடக்கக்கல்வியில் ஆடல் பாடல் மற்றும் SABL , SALM  முறையில் கல்வியினை கற்பித்து வருகிறார்கள். இதனை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் எவ்வாறு கையாள முடியும்?. மேலும்  அனைவருக்கும் கல்வித்திட்டம் ( SSA)  இடைநிலை சல்வித்திட்டம் ( RMSA) இதுவரை தனித்தனியாக நடைபெற்றுவந்த நிலையில் இரண்டையும் இணைத்து ஒருங்கிணைந்த கல்வி ( SS)  என்று
இணைத்ததன் விளைவாக எஸ்.எஸ்.ஏ மற்றும் ஆர்.எம்.எஸ்.ஏ ஆசிரியர் பயிற்றுநர்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியரின் கட்டுபாட்டிற்குள் வருவது மட்டுமின்றி CRC எனப்படும் வட்டார குறுவள மையங்களும் மேல்நிலைப்பள்ளிக்குள்ளேயே செயல்பட வேண்டும். பல வேலைகளை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியரிடம் வழங்கும்போது  பணிச்சுமையால் தொடக்க கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை பாதிப்பை ஏற்படுத்தும். கற்றல் கற்பித்தல் பணி முரண்பாடுகளில் சிக்கித்தவிக்கும்.
மேலும்,தொடக்கப்பள்ளி,நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி பறிக்கப்படும். எஸ்.எஸ்.ஏ, ஆர்.எம்.எஸ்.ஏ மேற்பார்வையாளர். பதவி பறிப்போகிறது.
     ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் பணிச்சுமையினை கூடுதலாக்கி மன உளைச்சலை ஏற்படுத்தும். மழலையர் கல்வி முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை ஒரே பள்ளி வளாகத்திற்குள் இருக்கலாம். ஆனால் ஒரே பள்ளியாக செயல்பட்டால் முதலும் கோணல் முற்றும் கோணலாக மாறிவிடும். மறு சீராய்வு என்ற பெயரில் ஆட்குறைப்பு நடவடிக்கையின் மூலம் எதிர்காலத்தில் பள்ளிக்கல்வி கேள்விக்குறியாகிவிடும் என்பதால் மாண்புமிகு. முதலமைச்சர் அவர்கள் மாணவர்கள் நலன் கருதி  பழைய நடைமுறையே தொடர்ந்திட ஆவனம் செய்யும்படி தமிழ்நாடு அசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகின்றேன்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் 98845 86716
Share on Google Plus

About Tnta

Am facilitator
    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment