TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

தீபாவளியினை மகிழ்ச்சியாக கொண்டாடிட 28 ந்தெதி ஈடு செய்யும் விடுப்பு வழங்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை


தீபாவளியினை மகிழ்ச்சியாக கொண்டாடிட 28 ந்தெதி ஈடு செய்யும் விடுப்பு வழங்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை


இந்தவருடம் தீபாவளி எதிர்வரும் 27.10.2019 ஞாயிற்றுக்கிழமை வருகிறது. பெரும்பாலும் ஆசிரியர்கள் சொந்த மாவட்டத்தில் வேலை செய்வதில்லை.பல்வேறு மாவட்டங்களில் பல கிலோ மீட்டர் தொலைவில் பணிபுரிந்துவருகிறார்கள். அனைவரும்  தீபாவளி நாளினை  கொண்டாடிவிட்டு அன்றே வெளியூரிலிருந்து பணிக்குத் திரும்புவது மிகவும் சிரமம் ஏற்படுத்துவதோடு மன உளைச்சலையும் ஏற்படுத்தும். தீபாவளி நன்னாளை குடும்பத்தோடு மகிழ்ச்சியாகக் கொண்டாடும் வகையில் தீபாவளி மறுநாளான திங்கள் கிழமையினை விடுமுறை நாளாக அறிவிக்கும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.மேலும் 28.10.2019 திங்கள் கிழமையினை ஈடு செய்திடும் பொருட்டு  அரசு அறிவிக்கும் ஏதாவது ஒரு விடுமுறை  நாளான சனிக்கிழமையன்று பணி செய்து ஈடுசெய்கின்றோம். எனவே ,மாண்புமிகு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் பரிசீலித்து தீபாவளி மறுநாள் 28.10.2019 அன்று விடுப்பு வழங்கிடும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் கேட்டூக்கொள்கிறேன். 

பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் 98845 86716
Share on Google Plus

About RAMESH K,TNTA TECHNICAL TEAM SECRETARY

    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment