தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் புதுச்சேரி மாநில கிளை தொடக்க விழாவிற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. புதுச்சேரி மாநிலத் தலைவர் திரு சீனு தண்டபாணி அவர்கள் தலைமையில் புதுச்சேரி மாநில தொடர்பாளர் திரு காசி மனோகரன் அவர்கள் முன்னிலையில் இன்றைய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. புதுச்சேரி மாநில கிளை செயலாளர் திரு சதீஷ்குமார் வரவேற்றுப் பேசினார். புதுச்சேரி மாநில கிளை பொருளாளர் திருமதி பாரதி அவர்கள் தொடக்க விழா குறித்து ஆலோசனைகள் வழங்கினார். துணைத் தலைவர் திரு.கோவலன், புதுச்சேரி மாநில கிளை செயற்குழு உறுப்பினர்கள் திருமதி சாந்தி குமாரி, திருமதி அனிதா தேவி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். திருவண்ணாமலை மாவட்ட கிளை இணைச் செயலாளர் திரு ஆர் ரவி அவர்கள் நன்றி கூறினார். இந்நிகழ்வில் திருவண்ணாமலை மாவட்டம், தெள்ளாறு வட்டார கிளை செயலாளர் திரு குணசேகரன், வட்டார பொருளாளர் திரு சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவை சிறப்பாக நடத்தவும் தொடக்க விழாவுக்கான விருந்தினர்களை கௌரவப்படுத்தும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் புதுச்சேரி மாநில கிளையை நடத்துவதற்கான ஆலோசனைகளும் செய்யப்பட்டது.
Home / TNTA news
/ - தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் புதுச்சேரி மாநில கிளை தொடக்க விழாவிற்கான ஆலோசனைக் கூட்டம் -07-02-21
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Comments:
Post a Comment