TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

அரசுபள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்-வரவேற்பு.மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை.





அரசுபள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்-வரவேற்பு.மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் மாநிலத்தலைவர்
பி.கே.இளமாறன்
அறிக்கை.
 2020-21 கல்வி ஆண்டு தொடங்கியும் கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகள் திறக்கமுடியாத சூழலில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என்ற அறிவிப்பு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப மாற்றிக்கொள்வது அவசியமாகிறது. கடந்த நான்கு மாதங்களாக கொரோனா பெருந்தொற்று தடுப்பு  நடாவடிக்கை காரணமாக பள்ளி,கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளார்கள் படித்தவைகள் மட்டுமல்ல எழுத்துகளே மறந்துபோகும் சூழல் உருவாகியுள்ளது. அரசு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என்ற அறிவிப்பு ஒருபுறம் மகிழ்ச்சியளித்தாலும் மறுபுறம் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.பெரும்பாலான அரசுபள்ளி மாணவர்களின் குடும்பங்கள் பொருளாதாராத்தில் பின்தங்கியவர்கள் தினக்கூலி வேலைசெய்யும் குடும்பங்களைச் சார்ந்தவர்கள்.இவர்களில் பெரும்பான்மையானோர் பட்டன் போன்களை பயன்படுத்துபவர்களே.ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் அறிவிப்பு வந்தது மகிழ்ச்சியளித்தாலும் தன் குழந்தைகள் பங்கேற்க முடியுமா ஆன்ட்ராய்டு போன் வசதியில்லையே என்ற ஏக்கம் மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.ஆகையால் ஆன்லைன் பங்கேற்கும் வகையில் லேப்டாப் அல்லது டேப் குறைந்தபட்சம் ஆன்ட்ராய்டு செல்போன் வழங்கி உதவிடவேண்டும். புத்தகம் மற்றும் நோட்டுகளை மாணவர்களுக்கு உடனடியாக வழங்கவேண்டும். இனி பேரிடர்காலம் மட்டுமல்ல எதிர்காலத்தில் தொழில்நுட்பம் வளர்ச்சிக்கு ஏற்ப மாற்றிக்கொள்வதும் கட்டாயம்.  ஆன்லைன் பயிற்சியினை பயமின்றி பாதுகாப்பாக  கற்க வசதியாக அரசே புதுச்செயலினை உருவாக்கி நெறிமுறை வகுத்து முறைபடுத்தவேண்டும்.EMIS போன்ற இணையதளத்துடன் இணைத்து கண்காணிக்கப்படவேண்டும்.
 ஆட்கொல்லி நோயான பெருந்தொற்று கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசு பல்வெறு நடவடிக்கைகள் மேற்கொண்டுவருவது பாராட்டுக்குரியது. தற்போது பள்ளிகள் திறக்கும் சூழல் இல்லாததால் ஆன்லைன் வகுப்புகள் அவசியமாகிறதை உணர்ந்து அரசு நடவடிக்கை மேற்கொண்டுவருவது வரவேற்புக்குரியது. மேலும் அரசுபள்ளி மாணவர்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் ஆன்ட்ராய்டு போன் வழங்க ஆவனசெய்யவேண்டி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்
98845 86716
Share on Google Plus

About RAMESH K,TNTA TECHNICAL TEAM SECRETARY

    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment