TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கையினை ஏற்று மாணவர்களின் நலன்கருதி +2. பொதுத்தேர்வை ரத்து செய்த மாண்புமிகு.முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் நெஞ்சார்ந்த நன்றி. மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை.

 



தமிழ்நாடு  ஆசிரியர் சங்கம் கோரிக்கையினை ஏற்று  மாணவர்களின் நலன்கருதி +2. பொதுத்தேர்வை ரத்து செய்த மாண்புமிகு.முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் நெஞ்சார்ந்த நன்றி. மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை.

  12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகுறித்து ஆசிரியர் சங்கங்கள் பெற்றோர்கள் கல்வியாளர்களின் கருத்துக்கேட்டு முடிவெடுக்கப்படும் என்று அறிவித்து மாண்புமிகு.பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் கருத்தினை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்கின்றது.

    நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை  பல உயிர்களை பலிவாங்கியதோடு இன்னும் நம்மை  மிரட்டி கோரத்தாண்டவம் தலைவிரித்தாடுகிறது. 

      கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழகமுதல்வரின் செயல்பாடுகள் நாடே போற்றும் வகையில் அமைந்துள்ளது.

    தமிழ்நாட்டில் சுமார் 35 ஆயிரத்துக்கும் மேலாக கொரோனா தொற்று உறுதிச்செய்யபட்ட நிலையில் அரசின் துரிதநடவடிக்கையால் படிப்படியாக குறைந்து வருவது ஆறுதல் அளிக்கிறது. இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம் WHO கொரோனாவின் 3 வது அலை சிறியவயதினரை அதிகம் பாதிக்கும் எனஎச்சரித்துள்ளது.பெருந்தொற்றுக் குறையும்வரை நாட்களை கடத்தி கல்வியாண்டினை நீட்டித்தால் மாணவர்களிடையே உள்ளச்சோர்வை ஏற்படுத்தும்.

மேலும் 

 8 லட்சத்து 45 ஆயிரம் மாணவர்கள் எழுதும் +2 தேர்வினை நடத்தினால் பெரும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.ஆகையால் மாணவர்களின் நலன்கருதி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் தொடர்ந்து வலியுறுத்திவந்தது. தமிழ்நாட்டிலும் 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வினை கொரோனா பெருந்தொற்று பாதுகாப்பு நடவடிக்கையாக இந்தஆண்டு மட்டும்  ரத்துசெய்த மாண்புமிகு.முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

     12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் வழங்க ஆய்வுக்குழு அமைத்தது வரவேற்புக்குரியது.

   தற்போது மாணவர்களின் படிப்பா உயிரா என்றால் உயிர்தான் முக்கியம்

  என்பதை மக்கள் முதல்வரின் செயல்பாடுகள் சிறப்பு.

 மேலும் நீட் தேர்வினை ரத்துசெய்து மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப்படிப்புக்கு தேர்வுசெய்திடவும், புதியக்கல்விக்கொள்கையின் அடிப்படையில் இளங்கலை,பொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்திடும் வகையில் வேறுவழியில் நுழையமுயன்றால் அதனை முழுமையாக தடுத்திடவும் தமிழக அரசினை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகின்றேன். அரசின் முயற்சிகளுக்கு தமிழ் நாடு ஆசிரியர் சங்கம்  உறுதுணையாய் இருக்கும் என்ற உறுதிமொழியினையும் அளிக்கின்றோம்.

 *பி.கே.இளமாறன்*

மாநிலத்தலைவர்

தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்

98845 86716

Share on Google Plus

About RAMESH K,TNTA TECHNICAL TEAM SECRETARY

    Blogger Comment
    Facebook Comment

2 Comments:

  1. 💐💐💐💐🙏🙏🙏💐💐💐💐
    *தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கையினை ஏற்று மாணவர்களின் நலன்கருதி +2. பொதுத்தேர்வை ரத்து செய்த மாண்புமிகு.முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் நெஞ்சார்ந்த நன்றி. மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை.*
    http://www.tnta.co.in/2021/06/2.html?m=1

    TNTA கோரிக்கை
    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
    *சி.பி.எஸ்.சி +2 தேர்வுகள் ரத்து.மாணவர்களின் நலன்கருதி தமிழகத்திலும் 12 ஆம் வகுப்புத்தேர்வினை ரத்து செய்ய தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள். மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை*
    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
    http://www.tnta.co.in/2021/06/12.html?m=1
    *12 ஆம் வகுப்புத்தேர்வினை ரத்து செய்ய TNTA வேண்டுகோள்.மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன்அறிக்கை. PTT NEWS* http://www.tnta.co.in/2021/06/12-tnta-ptt-news.html
    *TNTA NEWS AT PUTHIYATHALAIMURAI NEWS* http://www.tnta.co.in/2021/06/tnta-news-at-puthiyathalaimurai-news.html
    *TNTA NEWS AT MALAI MALAR* http://www.tnta.co.in/2021/06/tnta-news-at-malai-malar.html
    *TNTA NEWS AT DINKARAN* http://www.tnta.co.in/2021/06/tnta-news-at-dinkaran-june-3rd.html

    ReplyDelete
  2. மதிப்பிற்குரிய ஐயா, 

    நான் பண்ணிரண்டாம் வகுப்பு 
    படிக்கிறேன்.

    இப்போது வரும் செய்திகள் என்ன சொல்லுகிறது என்றால் நமக்கு 10th,11th,12th மதிப்பெண் முறையில் நமக்கு 12அம் வகுப்பு இறுதி தேர்வு மதிப்பெண் வழங்கப்படும் என்று கூறுகிறார்கள்.

    11அம் வகுப்பு மதிப்பெண்ணை அவர்கள் எவ்வாறு எடுக்கலாம்?

     நாங்கள் 11ஆம் வகுப்பில் நமது முழு முயற்சி மற்றும் உழைப்பை நாம் செலுத்தி இருக்க மாட்டோம்.

    பல மாணவர்கள் வெவெரு காரணங்களால் அவர்களால் 11th public இல் முழுமையான கவனத்தை செலுத்தி இருக்க முடியாமல் பொய் இருக்கக்கூடும்.

    அதனால் நம் அரசுக்கு 10th மற்றும் 12th மதிப்பெண்ணை கணக்கேடுத்த மதிப்பெண் வழங்குமாறு நாம் கேட்டு கொள்கிறேன்.


    மேல் அதிகாரிகள் யாராவது இந்த மெசேஜ் ஐ பார்த்தீர்கள் என்றால் எங்களுக்கு உதவி செய்யுங்கள்.

    🙏🏻🙏🏻🙏🏻

    ReplyDelete