TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

சி.பி.எஸ்.சி +2 தேர்வுகள் ரத்து.மாணவர்களின் நலன்கருதி தமிழகத்திலும் 12 ஆம் வகுப்புத்தேர்வினை ரத்து செய்ய தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள். மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை.

 



சி.பி.எஸ்.சி +2 தேர்வுகள் ரத்து.மாணவர்களின் நலன்கருதி தமிழகத்திலும் 12 ஆம் வகுப்புத்தேர்வினை ரத்து செய்ய தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள். மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை.

  12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகுறித்து ஆசிரியர் சங்கங்கள் பெற்றோர்கள் கல்வியாளர்களின் கருத்துக்கேட்டு முடிவெடுக்கப்படும் என்று அறிவித்து மாண்புமிகு.பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் கருத்தினை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்கின்றது.

    நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை  பல உயிர்களை பலிவாங்கியதோடு இன்னும் நம்மை  மிரட்டி கோரத்தாண்டவம் தலைவிரித்தாடுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழகமுதல்வரின் செயல்பாடுகள் நாடே போற்றும் வகையில் அமைந்துள்ளது.

    தமிழ்நாட்டில் சுமார் 35 ஆயித்துக்கும் மேலாக கொரோனா தொற்று உறுதிச்செய்யபட்ட நிலையில் அரசின் துரிதநடவடிக்கையால் படிப்படியாக குறைந்து வருவது ஆறுதல் அளிக்கிறது. இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம் WHO கொரோனாவின் 3 வது அலை சிறியவயதினரை அதிகம் பாதிக்கும் எனஎச்சரித்துள்ளது.பெருந்தொற்றுக் குறையும்வரை நாட்களை கடத்தி கல்வியாண்டினை நீட்டித்தால் மாணவர்களிடையே உள்ளச்சோர்வை ஏற்படுத்தும்.

மேலும் 8 லட்சத்து 45 ஆயிரம் மாணவர்கள் எழுதும் +2 தேர்வினை நடத்தினால் பெரும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.ஆகையால் சிபிஎஸ்சினைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வினை கொரோனா பெருந்தொற்று பாதுகாப்பு நடவடிக்கையாக இந்தஆண்டு மட்டும்  ரத்துசெய்யப் பரிசீலனை செய்யவேண்டும்

     12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான் உயர்கல்வி படிப்பினை தேர்வுசெய்யும் நிலையினை மறுப்பதற்கில்லை. தற்போது மாணவர்களின் படிப்பா உயிரா என்றால் உயிர்தான் முக்கியம்

  சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையமுடியும்..

எனவே 12 ம் வகுப்புக்கு ஏற்கனவே  செய்முறை மற்றும் 4 திருப்புதல் தேர்வுகளும் நடந்துமுடிந்நுள்ளதால் அதனடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிடுவதற்கு ஆவனசெய்யும்படி மாண்புமிகு.முதல்வர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன். மேலும் நீட் தேர்வினை ரத்துசெய்து மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப்படிப்புக்கு தேர்வுசெய்திடவும், புதியக்கல்விக்கொள்கையின் அடிப்படையில் இளங்கலை,பொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்திடும் வகையில் வேறுவழியில் நுழையமுயன்றால் அதனை முழுமையாக தடுத்திடவும் தமிழக அரசினை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகின்றேன். அரசின் முயற்சிகளுக்கு தமிழ் நாடு ஆசிரியர் சங்கம்  உறுதுணையாய் இருக்கும் என்ற உறுதிமொழியினையும் அளிக்கின்றோம்.

 பி.கே.இளமாறன்

மாநிலத்தலைவர்

தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்

98845 86716

Share on Google Plus

About RAMESH K,TNTA TECHNICAL TEAM SECRETARY

    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment