TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

தமிழ்நாட்டில் பின்லாந்து நாட்டின் கல்வி முறை - வரவேற்பும்-எதிர்பார்ப்பும்- பி.கே.இளமாறன் மாநிலத்தலைவர் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்

தமிழ்நாட்டில் பின்லாந்து நாட்டின் கல்வி முறை - வரவேற்பும்-எதிர்பார்ப்பும்-

பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்

 தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்தறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுவருகிறது. அதில் குறிப்பாக கல்வி அமைச்சர் கல்விக்குழுவினருடன் பின்லாந்து நாட்டிற்கு சென்று அங்கிருக்கும் கல்விமுறையினை அறிந்துவந்ததும் அந்நாட்டு கல்வியாளர்கள் இங்கு வந்ததும் மாற்றங்களுக்கான முதல்படியாகவே கருதுகிறோம்.பின்லாந்தில் அப்படியென்ன கல்வி முறை?  கேள்விக்குள் நுழைந்தால் அந்நாட்டின் மொத்த மக்கள் தொகை தமிழ்நாட்டின் தலை நகரான சென்னையின் மக்கள் தொகையளவுதான் இருக்கும்.சரியாக 55,36,306 பேர்கள் கொண்டகுட்டி குடியரசு நாடான வடக்கு ஐரோப்பாவிலுள்ள பின்லாந்து.
 *கல்விமுறை*
7 வயதே தொடக்கப்பள்ளியில் சேர்க்கும் வயதாகும்.
தொடக்கநிலை 1 முதல் 6 வகுப்பாகவும் இடைநிலை வகுப்புகள் 7 முதல் 9 வகுப்புகளாகவும் உள்ளன. 16 வயது வரை தேர்வு முறையில் மதிப்பெண்கள் மூலமாகவும் மதிப்பீடு மூலமாகவும் தேர்ச்சி என்பதில்லை. மாறாக மாணவர்கள் விரும்பி தேர்வு செய்துபடிக்கும் முறையில் ஆசிரியர்கள் உதவுவார்கள் . மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் என்பது அறவே இல்லை அச்சுறுத்தலும் இல்லை பயமில்லாமல் சுதந்திரமாக படிக்கும் முறையென்பதால் இடைநிற்றலும் இல்லை. இன்னும் தனியார் பள்ளிகளே இல்லை என்பது கூடுதல் சிறப்பு. பிரதமர் மகனும் சாதாரண விவசாயின் மகனுக்கும் ஒரே மாதிரி கல்வி தான். அங்கு அரசுப்பள்ளிகள் மட்டும்தான். கல்வியில் பேதமில்லை.
 கல்வி,விளையாட்டு,  இசை,  ஓவியம் உள்ளிட்டவை போதிக்கப்படுகிறது. தாய்மொழியோடு மற்றொரு மொழியும் போதனை மொழிகளாகும். ஒரு நாளைக்கு 4 மணி நேரம் தான் வகுப்புகள். ஒவ்வொரு பாடவேளைக்கும் 15 நிமிடங்கள் இடைவேளை மாணவர்கள் விருப்பப்படி பள்ளியில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்.உணவு இடைவேளை 1.30 மணி நேரம்.ஆரோக்கியமான சூழலில் பள்ளிகளில் சிறந்த உட்கட்டமைப்பு வசதியுடன் சுதந்திரமாக விரும்பி கற்கும் நிலை உள்ளதால் உலகநாடுகள் நத்தும் போட்டித்தேர்வுகளில் பின்லாந்து மாணவர்களால் சாதிக்கமுடிகிறது என்றால் அது மிகையாகாது.
     மேலும் *ஆசிரியர்களின்* **தகுதி* ஆசிரியராகப் பணிப் புரிய குறைந்தபட்சம் முதுகலை பட்டம் படித்தவர்களே நிர்ணயம். பி.எச்.டி முடித்தவர்கள் தான் உயநிலை வகுப்புகள் என்று தகுதி வாய்ந்த ஆசிரியர்கள்.
மாணவர்களைவிட அதிக கவனம் ஆசிரியர்கள் மீது அவர்களை உருவாக்க. அரசு அதிக அக்கரைக்கொண்டு பல பயிற்சிகள் மூலமாக மெருகேற்றுவார்கள்
    தகுதியான ஆசிரியர்களை உருவாக்கிவிட்டால் போதும் சிறந்த மாணவர்களை ஆசிரியர்கள் உருவாக்குவார்கள்.
ஆசிரியர்கள் மனநிறைவோடு பணியாற்ற அனைத்துவகையிலும் வசதி செய்யப்பட்டுள்ளது. சம்பள பிரச்சினையில் ஏற்றத்தாழ்வில்லை.
    நாட்டிலேயே அமைச்சர்கள் அடுத்து ஆசிரியர் பணி உயர் பணியாக கருதப்படுகிறது.
குறிப்பாக அரசின் கொள்கை திட்டம் செயலாக்கத்தில் ஆசிரியர்களின் ஆலோசனைப் பெறப்படுகிறது. கல்வி முறையில் இத்தனை சிறப்பம்சங்களைக் கொண்டு அனைத்து நிலையிலும் கல்வி இலவசமாக வழங்குவதால்  உலகநாடுகளில் பின்லாந்து கல்விமுறை கவனிக்கப்படுகிறது.
      தமிழ்நாட்டில் இம்முறையினை எதிர்பார்ப்பதில் அதிக ஆர்வமிருப்பது வரவேற்புக்குரியது.உடனடியாக செயல்படுத்தமுடியாதெனினும் படிப்படியாக செயல்படுத்தமுடியும்.
8 கோடி மக்கள் தொகையினை நாம் நெருங்கிவரும் நிலையில் இது சாத்தியமா என்பதைவிட நம் மாநிலத்திலும் முடியும் என்ற நம்பிக்கையோடு சமரசமில்லா நடவடிக்கையோடு செயல்பட்டால் எதுவும் முடியும்.நீக்கவேண்டியதை உடனே நீக்கவேண்டும்
* அங்கு 7 வயதுக்கு பிறகே பள்ளியில் சேர்க்கை.
இங்கு பால்மனம் மாறா குழந்தைகளை பள்ளியில் சேர்த்து மழலையிலேயே சுதந்திரத்தைப் பறிக்கிறோம்.
அங்கு 16 வயதுக்குப்பிறகே தேர்வு இங்கு 5 ஆம் வகுப்பிற்கே பொதுத்தேர்வினை திணித்து பிஞ்சுகளின் பொழுதுகளைக் களவாடுகிறோம். எது சிறந்தக்கல்வி என்று ஆராய்கின்றோமே தவிர எது குழந்தைக்கு ஏற்றக்கல்வி என்பதை கவனிக்கத் தவறிவிட்டோம். இனிவரும் காலங்களிலாவது மாற்றங்கள் ஏமாற்றங்களாக மாறாமல் முழுமையாக ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டியத் தருணத்தினை பயன்படுத்துவோம்
    1. கல்வி மாநில பட்டியலுக்கு கொண்டுவந்து   தமிழ்நாட்டிற்கென்று தனி கல்விக்கொள்கை வரையறுக்கப்படவேண்டும்.
2. கல்வியினை அரசே ஏற்று நடத்தி பொதுப்பள்ளி வாரியம் ஏற்படுத்தப்பட்டு யரளவிலே செயல்பட்டுவருகிறது.தனியார் பள்ளிகளையெல்லாம் இணைத்து அனைத்துப்பள்ளிகளும் அரசுப் பள்ளிகளாக மாற்றவேண்டும்.
3.மாணவர்களின் மனநிலை அறிந்து பாடத்திட்டங்களை தயாரிக்கவேண்டும்.  நாமே திட்டமிட்டதை திணிப்பதை தவிர்த்தல் வேண்டும்.
4. குழந்தைகள் விரும்பி பள்ளிக்குவரும் சூழலை உருவாக்கவேண்டும்.
5.அனைத்துக்குழந்தைகளும் பள்ளியில் சேர்க்கப்பட்டதை உறுதி செய்யவேண்டும்.
6.சுதந்திரமாக கற்றிட வழிசெய்யவேண்டும்
7.பள்ளிக்கூடங்கள் தரமான வண்ணமயமான கட்டிடடங்களாகவும் உட்கட்டமைப்பு வசதொயுடன் மகிழ்ச்சியான சூழலை உருவாக்குவதாக அமையவேண்டும்.
8.மாறிவரும் தொழில்நுட்பத்திற்கேற்ப வசதிகள்.
9.தகுதிவாய்ந்த ஆசிரியர்களை தேர்வுசெய்யவேண்டும். தொடக்கநிலை வகுப்புகளுக்கு ஆசிரியர் பட்டயப் படிப்பினை ஒழித்து பட்டப்படிப்புடன் ஆசிரியர் பட்டம் பயிற்சிமுடித்தவர்களை நியமிக்கவேண்டும்.
10.ஆசிரியர் பணிக்கு தொலைநிலைக்கல்வியில் பயின்றவர்கள்
எடுத்துக்கொள்ளக்கூடாது.
11.ஆசிரியர்களை கல்விபணிக்கு மட்டுமே பயன்படுத்தவேண்டும்.வேறு பணிகள் வழங்கக்கூடாது.
12. தொடக்கநிலை முதல் உயர்கல்வி வரை இலவசக்கல்வி வழங்குவதோடு கற்பதற்கு ஏற்ப அனைத்து வசதிகளும் மாணவர்களுக்கு அரசே செய்துதவேண்டும்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் 98845 86716
Share on Google Plus

About RAMESH K,TNTA TECHNICAL TEAM SECRETARY

    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment