TAMILNADU TEACHER ASSOCIATION (TNTA) FOUNDER P.K ILAMARAN

அரசு உதவிப்பெறும் பள்ளியில் பணிபுரியும் 1747 ஆசிரியர்களின் குடும்பங்களை கருணை அடிப்படையில் காப்பாற்றிடுக. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் பணிவான வேண்டுகோள் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை :

அரசு உதவிப்பெறும் பள்ளியில் பணிபுரியும் 1747 ஆசிரியர்களின் குடும்பங்களை கருணை அடிப்படையில் காப்பாற்றிடுக. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் பணிவான வேண்டுகோள் மாநிலத்தலைவர்
பி.கே.இளமாறன் அறிக்கை :
23.08.2010  அன்று அரசாணை 181 ன்படி  அரசு உதவிப்பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித்தேர்வில் 5 ஆண்டுகளுக்குள் வெற்றிப்பெற வேண்டும் என் அடிப்படையில் 1747ஆசிரியர்கள் நிபந்தனை  நியமிக்கப்பட்டார்கள்

2011 ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களை  பணிநியமனம் செய்யப்பட்டவரகள் 5 ஆண்டுகளில் 10 தடவை எழுதும் தேர்வுகளில் ஆசிரியர் தகுதி தேர்வு ( TET) எழுதித் தேர்ச்சிப்பெற வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டார்கள்.ஆனால் அரசு பல்வேறு காரணங்களால்  கடந்த 5  ஆண்டுகளில் நான்கு முறை மட்டுமே தேர்வு நடத்தியது.அதனால்  ஆசிரியர்களுக்கு முழுமையான வாய்ப்பு வழங்கப்படாமல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிப்பெறாத ஆசிரியர்களுக்கு  அரசு அறிவித்தது போல முறையாக ஆண்டுக்கு இருமுறை அப்போதே தேர்வு நடத்தியிருந்தால் இன்றைக்கு 1747 ஆசிரியர்கள் மனஉளைச்சலுக்கு தள்ளப்பட்டிருக்க மாட்டார்கள்.  கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்  தேர்வில் தேர்ச்சிப்பெறாததால்  பணித்தொடர்வது மட்டுமில்லாமல் வாழ்க்கையும் கேள்விக்குறியாகியுள்ளது. அவர்கள் சார்ந்த குடும்பங்களும் மீளா துயரத்தில் மூழ்கியுள்ளது.மேலும் தமிழ் ஆங்கிலம் கணக்கு அறிவியல் சமூக அறிவியல் என ஒவ்வொரு பாடத்திலும் தனித்தன்மையாக. விளங்கி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% வெற்றித்தந்த ஆசிரியர்களுக்கு அவர்தம் பாடத்தில் தேர்வு நடத்தியிருந்தால் 100% வெற்றிப்பெற்றிருப்பார்கள். ஆனால் 8 ஆண்டுகள் தமிழ் பாடம் நடத்தியவர்கள் திடிரென்று அனைத்து பாடங்களையும் எழுதசொல்வது ஏற்புடையதாகாது.
ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிடப்பட்ட பாடத்திட்டத்தினை விட கூடுதலாக மிக கடினமாக வினாக்கள் கேட்கப்பட்டிருந்தது.எ.மேலும், தமிழ், உளவியல், பொது அறிவு என பாடங்களுக்கு தலா 30  மதிப்பெண்களும் சமூக அறிவியல் பாடத்திற்கு 60 மதிப்பெண்கள் என மொத்தம் 150 மதிப்பெண்கள் அடிப்படையில் கேள்வித்தாள் அமைந்திருந்தது. முதன்மை பாடங்களான தமிழ், ஆங்கிலம், கணக்கு , அறிவியல்  பாடங்களுக்கு 30 மதிப்பெண்கள் வழங்கிவிட்டு சமூக அறிவியலுக்கு மட்டும் 60 மதிப்பெண்கள் என கேள்வித்தாள் தயாரிக்கப்பட்டிருந்தது.
இதனால் தம் பாடத்தில் சிறந்து விளங்கிய ஆசிரியர்களுக்கு அனைத்துப்பாடங்களுக்கும் தேர்வு எழுதுவது சிரமமே.உதாரணமாக 8 ஆண்டுகளாக தமிழ் பாடம் எடுத்தவர் சமூக அறிவியல் பாடத்தில் 60 மதிப்பெண்கள் எடுப்பது எப்படி சாத்தியமாகும். வினாத்தாள் அமைப்பு முறையே தவறாக உள்ளதால் தேர்ச்சிப்பெற முடியவில்லை.இருப்பினும் ஆசிரியர் பணி அறப்பணி அதனை அர்ப்பணி என்ற விதத்தில்  பணியாற்றிக்கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து முழுமையான விலக்கு அளித்து சிறுபான்மை பள்ளியில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெறாமல் இதே போன்று பணிபுரிந்து வந்தவர்களுக்கு 15 நாட்கள்  புத்தாக்கப் பயிற்சி அளித்து பணி தொடர செய்தது போல அரசு உதவிப்பெறும் பள்ளியில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப்பெறாத 1747 ஆசிரியர்களுக்கு  மாண்புமிகு.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் அக்டோபர் இரண்டாம் தேதி செய்தியாளர்கள் சந்திப்பில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப்பெறாத ஆசிரியர்களின் நலனை கருத்தில் கொண்டு அந்த ஆசிரியர்களுக்கு 10 நாட்கள் சிறப்பு பயிற்சியளித்து பணிபாதுகாக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார். இதுவரை பயிற்சியளிக்கப்படாது வருத்தமளிப்பதோடு தினந்தோறும் என்னபதில்வரும் என்றே மன உளைச்சலில் பணியாற்றி வருகிறார்கள்.இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் 18.12.2019 வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப் பெறாமல் அரசு உவிப்பெறும் பள்ளிகளில் பணியாற்றிவரும் 1747 ஆசிரியர்களின்  விவரங்களை கேட்டு 20.12.2019 க்குள் ஒப்படைக்க சொல்லியிருப்பது மீண்டும் ஆசிரியர்களின் பணி கேள்விக்குறியாகி விடுமோ என்ற அச்சம் மேலோங்கியுள்ளது. எனவே டெட் தேர்வு தேர்ச்சிப்பெறாமல் பணியாற்றிவரும் ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சியளித்து கருணை அடிப்படையில்  பணித் தொடர வாய்ப்பு வழங்கிடும்படி மாண்புமிகு. முதலமைச்சர் அவர்களை  தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டிக் கேட்டுக்கொள்கின்றேன்.
 பி.கே.இளமாறன் மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்
98845 86716
Share on Google Plus

About RAMESH K,TNTA TECHNICAL TEAM SECRETARY

    Blogger Comment
    Facebook Comment

0 Comments:

Post a Comment