2020 ஆம் ஆண்டு முதல் CPS பங்களிப்புத் தொகை 10 + 10 சதவீதம் சம்பளத்தில் பிடிக்க வேண்டும் என்ற கருவூலத்தின் அறிவுறுத்தல் பேரில் சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளார்கள்.
பல மாவட்டங்களில் CPSல் பணிபுரிந்து மறுநியமனத்தில் பணி நீட்டிப்பில் பணி புரிபவர்களுக்கு பங்களிப்புத் தொகை ( Employee 10%+ Employer 10%) பிடித்தம் செய்யப்படுவதில்லை. மேலும் பணியாளர்களுக்கு ஏற்கனவே CPS final Settlement தொகையும் பெறப்பட்டுள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மறுநியமனம் பணி நீட்டிப்பு காலத்திற்கு மட்டும் CPS Settlement தனியாக அனுப்ப வேண்டுமா என்ற வினாவும் எழுகின்றது.
எனவே இப்பொருள் சார்ந்து விரைந்து நடவடிக்கை எடுத்து நிலுவையில் உள்ள சம்பளம் விரைந்து வழங்க ஆவண செய்யுமாறு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
0 Comments:
Post a Comment