மூன்று சதவீத அகவிலைப் படியை உயர்த்தி வழங்க வேண்டும்: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை:
மத்திய அரசு ஆனது தனது பணியாளர்களுக்கு அகவிலை படியை 50 லிருந்து 53 ஆக உயர்த்தி வழங்கி உள்ளது .இந்த அகவிலைப்படியை சூலை 2024 முதல் செப்டம்பர் 2024 முடிய மூன்று மாதங்களுக்கு ரொக்கமாகவும் அக்டோபர் 2024 மாதம் ஊதியத்தில் சேர்க்கும் படியாக அறிவிப்பு செய்துள்ளது.மத்திய அரசு எப்போதெல்லாம் அகவிலைப்படி உயர்த்துகிறதோ அதை பின்பற்றி தமிழ்நாடு அரசும் தனது ஊழியர்களுக்கு அகவிலை படியை உயர்த்தி வழங்கும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏற்கனவே வாக்குறுதியை அளித்துள்ளார்.அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு அரசில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஊராட்சி செயலாளர்கள் ,ஊர் புற நூலகர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பணி புரியும் பணியாளர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுவார்கள் ,சிறப்பு கால முறை ஊதியம் பெறும் பணியாளர்கள், தொகுப்பு ஊதியம் மற்றும் மதிப்பு பெறும் பணியாளர்கள் ஆகிய 16 இலட்சம் பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு அகவிலைப்படி 50 லிருந்து 53 சதவீதம் உயர்த்தி அறிவிக்குமாறும் ஜூலை 2024 ஆகஸ்ட் 2024 செப்டம்பர் 2024 ஆகிய மூன்று மாதங்களுக்கு ரொக்கமாகவும் அக்டோபர் 2024 மாதத்தின் அகவிலைப் படியை ஊதியத்தில் சேர்க்கும் படியாகவும் அறிவிப்பு வழங்கி தீபாவளி பண்டிகையை 16 இலட்சம் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் மகிழ்ச்சியாக கொண்டாட இனிப்பான செய்தியை வழங்குமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மக்களின் முதல்வர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் சார்பாக வேண்டி வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.
0 Comments:
Post a Comment