பொறுப்பேற்றவுடன் கொரோனா நிவாரணநிதி 4000 முதல் கையெழுத்திட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் நன்றி.மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை.
புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் கொடிய கொரோனா காலத்தில் அவதிப்படும் மக்களின் நிலையறிந்து முத்தான முதல் 5 கையெழுத்துகளிட்ட மக்களின் முதல்வர் ஸ்டாலின்.என்பதை மக்களுக்கு நம்பிக்கையினை ஏற்படுத்தியிருக்கிறது. இதன்மூலம் தேர்தல் பரப்புரையின்போது அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
1.கொரோனா நிவாரணமாக குடும்ப அட்டைக்கு ரூ- 4000 அறிவித்து அதனை உடனடியாக முதல் தவணையாக 2000 மே மாதத்திலேயே வழங்கப்படும் என்பது ஏழைகளின் ஏக்கத்தைப் போக்கியிருக்கிறது.
தொடர்ந்து
2.ஆவின் பால் விலை ரூ-மூன்று குறைப்பு
3.நகரப் பேருந்துகளில் மகளிர் கட்டணமின்றி பயணிக்கலாம்
4.100 நாட்களுக்குள் தீர்வுகாண உங்கள் தொகுதி முதலமைச்சர் திட்டம் புதியத்துறை வரவேற்புக்குரியது.
5.தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணத்தை தமிழக அரசு காப்பீட்டு திட்டம் கீழ் ஏற்கும் என்ற அறிவிப்பு எதிர்காலத்தில் மருத்துவத்துறை தன்னிறைவு அடைவதற்கான அறிகுறியாகவேத் தெரிகின்றது.
முத்தான 5 திட்டத்தை அறிவித்த மாண்புமிகு.முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்.
98845 86716
No comments:
Post a Comment