Pages

Pages

Tuesday, May 26, 2020

கொரோனா தாக்கம் குறைந்தபிறகு 10 ஆம் வகுப்பு தேர்வு நடத்த மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள். மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை.





கொரோனா தாக்கம் குறைந்தபிறகு 10 ஆம் வகுப்பு தேர்வு நடத்த மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்.
மாநிலத்தலைவர்
பி.கே.இளமாறன்
அறிக்கை.
10 ஆம் வகுப்பு  பொதுத்தேர்வு கடந்த மார்ச் 27 ந்தேதி தொடங்க இருந்தநிலையில் கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது வரை தேர்வு நடக்குமா நடக்காதா  மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் குழப்பம் நீடிக்கிறது.காரணம் நாளுக்குநாள் கொரோனா விஸ்வரூபமெடுத்துவருகிறது. மார்ச் மாதம் தேர்வு நடைபெற இருந்த காலகட்டத்தில் தமிழத்தில் கொரோனா தொற்று 9 பேரை மட்டுமே தொற்றியிருந்த நிலையில் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இன்று 17 ஆயிரத்தைத் தாண்டி கொரோனா மின்னல் வேகத்தில் பரவிவருகிறது. ஜுன் 15 ல் பொதுத்தேர்வு என்பது பொதுவாகவே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டுவந்தாலும் தொற்று பரவுவதிலிருந்து குறைக்க முடியுமே தவிர தடுப்பது இயலாது என்பது நடைமுறை உண்மை.பொதுத்தேர்வினை ரத்துசெய்ய இயலாதபட்சத்தில் பல்வேறு கருத்துருக்கள் தேர்ச்சி வழுக்காடு 25 மதிப்பெண்களாக. குறைப்பது மொழிப்பாடங்களை ரத்துசெய்வது என ஆலோசிப்பதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.தேர்வு நடத்தினால் அனைத்து பாடங்களுக்கும் குறைந்தபட்சம் தேர்ச்சி மதிப்பெண் 35 குறையாமல் வைப்பதுதான்.தேர்வின் உண்மைநிலை உணர்த்துவதாகும்.மேலும், கொரோனா  நம்மை தொற்றிவிடுமோ என்ற அச்சத்திலேயே வாழ்ந்துக்கொண்டிருக்கும் நிலையில் தேர்வு மையத்திற்கு பிள்ளைகளை அனுப்பிவைத்தால் அதன்மூலம் பரவிவிடுமா என்ற பயமும் உள்ளது.எதிர்கால வாழ்வு சிறப்பா தற்போது உயிரோடு இருந்தால்தானே எதிர்கால வாழ்வைபற்றி சிந்திக்கமுடியும். 10 ஆம் வகுப்பு தேர்வு நடத்தியே ஆகவேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசு தேர்வுகளை கொரோனா கட்டுபாட்டிற்குள் வந்தபிறகு தேர்வு நடத்தலாம். ஒட்டுமொத்த மாணவர்களின் நலனைக்கருத்தில் கொண்டு தேர்வு நடத்திடும்போது மாநிலம் முழுவதுமுள்ள கொரோனா பரவல் நிலையினை ஆராய்ந்து தேர்வு நடத்தவேண்டும்.  சென்னையை பொறுத்தவரை 80 % கட்டுபடுத்தப்பட்டப் பகுதிகளாக உள்ளது.  11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தினந்தோறும் சென்னையில் மட்டும் 500 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் பொதுத்தேர்வு நடத்தினால் சென்னையில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாதிப்புக்கு உள்ளாவார்கள்.உயிரா, தேர்வா என்பதில் அரசு நல்லமுடிவினை எடுக்கும் என நம்புகிறோம்.ஒட்டுமொத்த பெற்றோர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் வகையில் கொரோனாவை கட்டுபாட்டிற்குள் கொண்டுவந்தபிறகு 10 ஆம் வகுப்பு தேர்வுநடத்த ஆவனசெய்யும்படி மாண்புமிகு.முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்
98845 86716

No comments:

Post a Comment