கபசுர குடிநீரை ரேசன் கடையில் வழங்கிடவேண்டும்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள். மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை.
உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கும் பரவி இந்தியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 22 பேர் பலிவாங்கியுள்ளது.தமிழ்நாட்டில் 124 பேரையும் கொரோனா தாக்கியது உறுதியாகியுள்ளது.மாநில அரசு முழு மூச்சாக கொரோனா பரவல் தடுப்பில் ஈடுபட்டு இலட்சக்கணக்கான உயரதிகாரிகள் மருத்துவர்கள் முதல் தூய்மைப்பணியாளர்கள் வரை தன்னலமின்றி பணியாற்றி வருவது பாராட்டுக்குரியது. இந்நிலையில் தங்களை நோய் தாக்குமோ என்ற பயத்தில் உடலில் நோய் எதிர்ப்புசக்தியினைபெருக்க கபசுர குடிநீரை மக்கள் ஊரடங்கையும் மீறி வாங்கவருவதால் கொரோனா பரவல் அதிகரித்து சமூகப் பரவலாகிவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே மக்களுக்குத் தேவைப்படும் நோய் எதிர்ப்பு சக்தியளிக்கும் கபசுர குடிநீரையோ அல்லது அதற்குரிய மூலிகைப்பொருளையோ இலவசமாக ரேசன் கடைகளில் வழங்க அரசு ஆவனசெய்யும்படி மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் 9884586716
No comments:
Post a Comment