Pages

Pages

Saturday, May 25, 2019

ஜூன் 3ல் பள்ளிகள் திறப்பு: புத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி துவக்கம்

ஜூன், 3ல் பள்ளிகள் திறப்பு, உறுதியாகியுள்ள நிலையில், மாணவ, மாணவியருக்கு இலவசமாக வழங்க பாடப்புத்தகங்கள், அந்தந்த பள்ளிகளுக்கு எடுத்து செல்லும் பணி துவங்கியது.கடந்தாண்டு, 1, 6, 9, பிளஸ் 1 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தில் புத்தகம் வழங்கப்பட்டது. நடப்பாண்டில், 2, 3, 4, 5, 7, 8, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டத்தில் புத்தகம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறையில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளி மாணவ, மாணவியருக்கு, தமிழ்நாடு பாடநூல் கழகம் மூலம், புதிய புத்தகங்கள் வருகை தரும். மே இறுதியில் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி, ஜூனில் பள்ளி திறந்த முதல் நாளில், புத்தகங்கள் வழங்கப்படும்.

No comments:

Post a Comment