Pages

Pages

Saturday, April 9, 2022

தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கையினை ஏற்று சென்னை பள்ளி மாணவர்களுக்கு காலைச்சிற்றுண்டி வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிப்புசெய்த மாண்புமிகு. முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.- மாநிலத் தலைவர் பி.கே இளமாறன்

 தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கையினை ஏற்று சென்னை பள்ளி மாணவர்களுக்கு காலைச்சிற்றுண்டி வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிப்புசெய்த மாண்புமிகு. முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.



      பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பங்களிலிருந்துதான் குழந்தைகளில் சென்னைப்பள்ளிகள் படிக்கிறார்கள். பெரும்பாலான மாணவர்கள் காலை உணவு சாப்பிடாமல் வருவதால் ஒருவிதமாக சோர்வாகவே காணப்படுவார்கள்.

   இதனால் கல்வியில் கவனம் செலுத்தமுடியாது. உடலும் உள்ளமும் ஒருசேர அமைந்தால்தான் கற்றலும் கற்பித்தலும் சிறப்பாக நடக்கும். இதனையறிந்து தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வலியுறுத்தியதன்பேரிலும் புதியதாக தேர்வான வணக்கத்திற்குரிய சென்னைமேயர்,வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழுத்தலைவரிடமும் திட்டம் பற்றி விரிவாக தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் நிருவாகிகள் எடுத்துக்கூறி வலியுறுத்தியன்பேரில் இன்று பெருநகர சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் சென்னைப்பள்ளி  மாணவர்களுக்கு காலைச்சிற்றுண்டி வழங்கப்படும் அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது. இதன்மூலம் கற்றல் கற்பித்தல் சிறப்பாகவும் மாணவர் சேர்க்கையும் அதிகரிக்கும் என்பதில் மிகையில்லை.

   வரலாற்றுச்சிறப்புமிக்க அறிவிப்பினை அறிவித்த மாண்புமிகு முதலமைச்சர்,வணக்கத்திற்குரிய மேயர்,வரிவிதிப்பு மற்றும் நிதிநிலைக்குழுத் தலைவர் அவர்களுக்கும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் சென்னைப்பள்ளிகளை கல்வியினை மேலும் தரம் உயர்த்தும் வகையில் மாதிரிப்பள்ளிகளாக மாற்றுவதற்கு பரிசீலனை செய்திடும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன்.

 *பி.கே.இளமாறன்*

மாநிலத்தலைவர்

தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்.

98845 86716

No comments:

Post a Comment