நவ.1 முதல் பள்ளிகளில் பின்பற்றப்பட வேண்டிய வகுப்பு வாரியான கற்பித்தல் திட்டம் - தொ.க இயக்குநர் சுற்றறிக்கை
கொரோனா பெருந்தொற்று கால நீண்ட இடைவெளிக்குப்பின்
திங்கள் கிழமை (2021 நவம்பர் 1) முதல் தொடங்கவுள்ள I - VIII
வகுப்புகளுக்கான கற்பித்தல் திட்டம் குறித்து தொடக்கக் கல்வி
இயக்குநர் சுற்றறிக்கை (எண்:2 நாள்:30.10.2021)
வெளியிட்டுள்ளார். அதன்படி,
☝🏽 முதல் 10 - 15 நாள்களுக்கு கதை, பாட்டு, விளையாட்டு, வரைதல்
உள்ளிட்ட மனமகிழ்ச்சிச் செயல்பாடுகளும்,
✌🏽 45 - 50-ஆம் நாள் வரை விடுப்புகால கற்றல் இழப்புகளை
ஈடுசெய்யும் புத்தாக்கப் பயிற்சிகளும்,
👍🏽 அதன்பின்னரே முதன்மைப்படுத்தப்பட்ட (அரசு தேர்வு
செய்துள்ள பாடப்பகுதி மட்டும் அடங்கிய) பாடத்திட்டத்தைக்
கற்பிக்க வேண்டும்.
இம்மூன்று படிநிலைகளுக்கான வழிகாட்டல்கள் & கட்டகங்கள்
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால்
உருவாக்கப்பட்டுள்ளன. இதனை வகுப்பு வாரியாக எவ்வாறு
பயன்படுத்துவது என்பதையும் தொடக்கக் கல்வி இயக்குநர்
தனது சுற்றறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளார். அதன்படி,
வகுப்பு - I:
☝🏽 முதல் 10 - 15 நாள்களுக்கு மனமகிழ்ச்சிச் செயல்பாடுகள்.
👍🏽 இதனை நிறைவு செய்த பின்னர் முதன்மைப்படுத்தப்பட்ட
பாடத்திட்டம்.
வகுப்புகள் II - V:
☝🏽 முதல் 10 - 15 நாள்களுக்கு மனமகிழ்ச்சிச் செயல்பாடுகள்.
✌🏽 45 - 50-ஆம் நாள் வரை புத்தாக்கப் பயிற்சிகள்.
👍🏽 இவ்விரண்டையும் நிறைவு செய்த பின்னர்
முதன்மைப்படுத்தப்பட்ட பாடத்திட்டம்.
வகுப்புகள் VI - VIII:
☝🏽 முதல் 10 - 15 நாள்களுக்கு மனமகிழ்ச்சிச் செயல்பாடுகள்.
✌🏽 வகுப்பிற்கேற்ற கற்றல் அடைவை மாணவர் பெற்றிருப்பின்
ஆசிரியரே ஒரு கால அளவை நிர்ணயித்து, அக்காலத்தில்
புத்தாக்கப் பயிற்சிகளை மீள்பார்வையாக (Recall) பயன்படுத்திக்
கொள்ளலாம்.
👍🏽 அதன் பின் முதன்மைப்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தைக்
கற்பிக்கலாம்.
*ஆசிரியர்கள் ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருந்த திங்கள்
திங்களன்று முழுமையாகிறது! உங்களின் வழக்கமான
செயல்திறத்தால் நமது மாணவச் செல்வங்கள்
பெருந்தொற்றுகால இழப்புகளில் இருந்து மீண்டு பயன்பெற
வாழ்த்துகள்.
🔖ELEMENTARY DIR.PRO
STANDARD II TO
V ENGLISH MEDIUM
STD VI
No comments:
Post a Comment