Pages

Pages

Friday, April 3, 2020

தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கையினை ஏற்று பத்திரிகை, ஊடகத்துறையினருக்கு ஊக்கத்தொகை வழங்கிய மாண்புமிகு. முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் நன்றி - காவல்துறையினருக்கும் வழங்க வேண்டுகோள். மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை.





தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கையினை ஏற்று பத்திரிகை, ஊடகத்துறையினருக்கு ஊக்கத்தொகை வழங்கிய மாண்புமிகு. முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் நன்றி - காவல்துறையினருக்கும் வழங்க வேண்டுகோள்.
மாநிலத்தலைவர்
பி.கே.இளமாறன் அறிக்கை.
         உலகையே உறையவைத்துக்கொண்டிருக்கும் கொரோனா விலிருந்து மக்களை காப்பாற்றும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் தமிழ்நாடு அரசினை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வாழ்த்திப் பாராட்டுகின்றோம்.
மேலும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப்பணி யாளர்களுக்கு சிறப்பு ஊதியம் அறிவிக்கப்பட்டதற்கு வரவேற்கிறோம். அதேபோன்று மக்களுக்காக இரவு பகல் பாராமல் பணிமேற்கொண் டிருக்கும் காவல்துறையினருக்கும் கொரோனா பரவல் சமூகப் பரவலாக மாறிவிடாமல் தடுத்திடும் பணியில் விழிப்புணர்வுகளை எற்படுத்தி அரசுக்கும் மக்களுக்கும் பாலமாகச் செயல்பட்டுவரும் பத்திரிகை ஊடகத்துறை யினருக்கும் சிறப்பு ஊதியம் வழங்குமாறு மார்ச்-28 ந்தேதி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வைத்த  கோரிக்கையினை ஏற்று ரூ.3000   ஊக்கத்தொகை அறிவித்த மாண்புமிகு. முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றி.  இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முதன்மையென்றால் அதுமிகையாகாது.  தமிழக அரசின் வழிகாட்டுதலைப் பின்பற்றி பாதுகாத்திடும்   பத்திரிகை , ஊடகத்துறையில் பணிபுரிவர்களுக்கு சிறப்பு ஊக்கஊதியம் அறிவித்தது போன்று காவல்துறையினருக்கும் ஊக்கஊதியம் வழங்க ஆவனசெய்யும்படி மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன்.
பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் 98845 86716

No comments:

Post a Comment