Pages

Pages

Tuesday, June 4, 2019

தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 95 எக்சிகியூட்டிவ் அசிஸ்டன்ட்ஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது


தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 95 எக்சிகியூட்டிவ் அசிஸ்டன்ட்ஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Executive Assts
காலியிடங்கள்: 95
வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 18 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு கோரும் குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தகுதி: பி.சி.ஏ., பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி.

படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் அல்லது ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று எம்.எஸ். ஆபீஸ் மென்பொருள் பயிற்சி சான்றிதழ் பெற்றிருப்பது அவசியம்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத் திறனாளிகள், அனைத்துப் பிரிவைச் சேர்ந்த பெண் விண்ணப்பதாரர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சிறுபான்மை பிரிவினர் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தேர்வு மற்றும் திறமைத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:www.rrcmas.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://onlinedatafiles.s3.amazonaws.com/docs/DEO_Notificaton.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.06.2019

No comments:

Post a Comment