3, 4, 5, 8 அகிய வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் வரும் ஜூன் 15ம் தேதிக்கு பிறகே கிடைக்கும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 1, 6, 9, 11ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 2, 7, 10, 12ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றப்பட்டு அச்சுப் பணிகள் நிறைவடைந்தன. இதனிடையே 3, 4, 5, 8 வகுப்புகளுக்கும் இந்த கல்வி ஆண்டிலேயே புதிய பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்த நிலையில் பாடபுத்தகங்கள் தயாரிப்புப் பணிகள் அவசர அவசரமாக நடைபெறுகின்றன. எனினும் 3, 4, 5, 8 வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் ஜுன் 15ம் தேதிக்கு பிறகே கிடைக்கும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
ஏனெனில், 3, 4, 5, 8 வகுப்புகளுக்கும் இந்த கல்வி ஆண்டிலேயே புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என இறுதி நேரத்தில் அரசாணை வெளியிடப்பட்டதால், புதிய பாடத்திட்ட தயாரிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனால், புதிய பாடத்திட்டத்தின் இறுதி வடிவமானது மே மாதத்தில் தான் தமிழக பாடநூல் கழகத்திற்கு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, புதிய பாடத்திட்டத்தை அச்சிடும் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜூன் 3ம் தேதியே பள்ளிகள் திறக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த நான்கு வகுப்புகளுக்கான புத்தகங்கள் முற்றிலுமாக கிடைக்கவில்லை என பள்ளிகள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, 3ம் வகுப்புக்கான பாடப்புத்தகங்கள் 45% மற்றும் 5ம் வகுப்புக்கான புத்தகங்கள் 75% தயாராகிவிட்டதாகவும், அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 மற்றும் 8ம் வகுப்புகளுக்கான புத்தகங்கள் முழுமையாக தயாராகிவிட்டதாகவும் பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது. இதற்கிடையில், பாடப்புத்தகங்கள் கிடைக்கும் வரை ஆசிரியர்கள் www.textbooksonline.tn.nic.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து பாடங்களை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏனெனில், 3, 4, 5, 8 வகுப்புகளுக்கும் இந்த கல்வி ஆண்டிலேயே புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என இறுதி நேரத்தில் அரசாணை வெளியிடப்பட்டதால், புதிய பாடத்திட்ட தயாரிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனால், புதிய பாடத்திட்டத்தின் இறுதி வடிவமானது மே மாதத்தில் தான் தமிழக பாடநூல் கழகத்திற்கு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, புதிய பாடத்திட்டத்தை அச்சிடும் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜூன் 3ம் தேதியே பள்ளிகள் திறக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த நான்கு வகுப்புகளுக்கான புத்தகங்கள் முற்றிலுமாக கிடைக்கவில்லை என பள்ளிகள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, 3ம் வகுப்புக்கான பாடப்புத்தகங்கள் 45% மற்றும் 5ம் வகுப்புக்கான புத்தகங்கள் 75% தயாராகிவிட்டதாகவும், அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 மற்றும் 8ம் வகுப்புகளுக்கான புத்தகங்கள் முழுமையாக தயாராகிவிட்டதாகவும் பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது. இதற்கிடையில், பாடப்புத்தகங்கள் கிடைக்கும் வரை ஆசிரியர்கள் www.textbooksonline.tn.nic.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து பாடங்களை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment